Wednesday, May 2, 2012

சரத் பொன்சேகாவின் பிணை மனு ஒத்திவைப்பு

சரத் பொன்சேகாவின் பிணை கோரிய மனு எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிணை கோரிக்கையை விசாரிக்கவிருந்த ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் குழுவில் இருவர் வெளிநாடு சென்ற நிலையில், இந்த மனு எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை, சரத் பொன்சேகாவின் மருத்துவ அறிக்கையை சமர்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com