Tuesday, May 15, 2012

இங்கிலாந்தில் 50 பெண்களை பாலியல் பலாத்தகாரம் புரிந்த 8 பாக்கிஸ்தானியருக்கு சிறை!

இங்கிலாந்தில் 50 இளம்பெண்களை பலாத்காரம் செய்த பாகிஸ்தானியர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டர் நகரில் உள்ள ரோச்டேல் பகுதியில் டீன் ஏஜ் பெண்கள் பலர் பாலியல் கொடுமை மற்றும் பலாத்காரத்துக்கு ஆளானது தெரிய வந்தது. மேலும் பலர் கருக்கலைப்பு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி, பாகிஸ்தானை சேர்ந்த 8 பேர், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் வெள்ளையினத்தை சேர்ந்த 50 டீன் ஏஜ் பெண்களை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

டீன் ஏஜ் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறியும், பரிசு, பணம் கொடுத்தும் அவர்களை இந்த கும்பல் அழைத்து சென்றுள்ளது. அவர்களுக்கு மது கொடுத்து குடிக்க வைத்துள்ளனர்.

பின்னர் பல முறை அவர்களை பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பான வழக்கில் அனைவருக்கும் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. கும்பல் தலைவனுக்கு 59 வயதாகிறது. அவருடைய பெயர் வெளியிடப்படவில்லை. பலாத்காரம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் இவருக்கு 19 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தவிர கபீர் ஹாசன் (25), அப்துல் ஆசிஸ் (41), அப்துல் ரவுப் (43), முகமது சாஜித் (35), அடில்கான் (42) உள்பட மொத்தம் 9 பேருக்கு 12 ஆண்டு முதல் 15 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com