Tuesday, May 15, 2012

மெக்சிகோவில் பைகளில் போடப்பட்ட நிலையில் 49 பேரின் சடலங்கள் மீட்பு

மெக்சிகோவின் மொண்டெரே நகரில் கொலை செய்யப்பட்டு பைகளில் போடப்பட்ட நிலையில் 49 பேரின் சடலங்களை மெண்டெரே நகரின் வீதியோரத்திலிருந்து மீட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெக்சிகோவில் செயல்பட்டு வரும் போதை பொருள் வர்த்தக கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலே இக்கொலைக்கு காரணமாக இருக்கலாமென மெக்சசிகோ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

2006 ஆம் ஆண்டு முதல் மெக்சிகோவில் போதை பொருள் கும்பல்களுக்கிடையிலான மோதல்களால் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com