Saturday, April 7, 2012

மட்டக்களப்பில் நான்கு சிலைகள் இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு சேதம்

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள நான்கு சிலைகள் இனந் தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு நகரின் மத்தியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலை, சாரணியத் தந்தை சேர் பேடன் பவுலின் சிலை, ஆனைப்பந்தி வித்தியாலயத்தில் அமைந்திருந்த சுவாமி விபுலானந்தர் சிலை , மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக நிறுவப்பட்டிருந்த புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை சிலை என்பவே நேற்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன.

இச்சிலை உடைப்பு சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment