Tuesday, April 10, 2012

நில்வளா கங்கையில் முதலைகளின் தொல்லைகளை இல்லாதொழிப்பதற்கான புதிய திட்டம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமையவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரின் பரிந்து ரைக்கிணங்கவும் நில்வளா கங்கையில், முதலைகளின் தொல்லைகளை இல்லா தொழிப்பதற்காக கிரலகெலே பகுதியில் முதலை பூங்காவொன்றைநிர்மானிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக அமைச்சர் டளஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 12 மில்லியன் ரூபா செலவில் இம்முதலை கூடங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும், சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கு இந்த முதலை பூங்கா வழிவகுக்குமென எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com