Saturday, April 14, 2012

கொழும்பு திரும்புவதற்காக விஷேட ரயில் சேவைகள்

பண்டிகை காலங்களின் போது வீடு திரும்பிய மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக விஷேட ரயில் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை ரயில் திணைக்கள திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்ஹ வெளியிட்டுள்ளார்.

விஷேடமாக திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படும் கரையோர தொடருந்து பாதையில் எதிர்வரும் 18ம் திகதி வரை சேவைகள் இடம் பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்றைய தினமும் மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவைகள் இடம் பெறும் என இலங்கை தனியார் உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment