Tuesday, April 24, 2012

இனத்தெரியாதவர்களால் ஒருவர் அடித்துக் கொலை வடமராட்சியில் பரபரப்புச் சம்பவம்

வடமராட்சிப் பகுதியில்இளைஞர் ஒருவர் இனத் தெரியாதவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பமவ் இன்று மதியம் 1 மணியளவில் வடமராட்சியின் வதிரிச் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்களில் வந்த இனம் தெரியாதவர்களே இவ்விளைஞரை அடித்துக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவரது சடலம் தற்போது பருத்தித்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment