Monday, April 23, 2012

நீர்கொழும்பு அல் ஹிலால் மத்தியக் கல்லூரியில் விஷேட கல்விப் பிரிவு ஆரம்பம்

நீர்கொழும்பு அல் ஹிலால் மத்தியக் கல்லூரியில் விஷேட கல்விப் பிரிவு அண்மையில் (19-4-2012) ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் எம்.எம்.எம்.கஸ்ஸாலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நீர்கொழும்பு வலய மேலதிக கல்விப் பணிப்பாளர் டி.எப். .பிலீஸியன் பெரோரா, விஷேட கல்விப் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் உபாலி மதுரப்பெரும, நீர்கொழும்பு வலய அபிவிருத்திக்கு பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் அன்ரணி பெர்னாண்டோ,ஆரம்ப கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி அபேசிறி ஆகயோர் கலந்து சிறப்பித்தனர்.

வலய மேலதிக கல்விப் பணிப்பாளர் டி.எப். .பிலீஸியன் பெரோரா நாடாவை வெட்டி விஷேட கல்விப் பிரிவை திறந்து வைத்தார்.

செய்தியாளர் - எம்.இஸட்.எஸ்.

No comments:

Post a Comment