Saturday, April 7, 2012

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் முதிய தமிழ் பெண் மரணம்.

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து இலங்கைக்கு வருவதற்காக இலங்கை சேவை விமானத்தில் இருந்த பெண் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு நோய் காரணமாக விமானத்தில் வைத்தே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிரிழந்தவர் 82 வயதுடைய மாலசிலாமணி இராஜசிங்கம் என்ற பெயருடைய முதிய பெண் ஒருவராவர்.

இது தொடர்பாக மரணப் பரிசோதனை நடத்தப்பட்டு பிரேதத்தினை குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com