Thursday, April 19, 2012

அரச காணிகள் தொடர்பான தகவல்களை வரைபடங்களாக்க நடவடிக்கை

மேல் மாகாணத்தில் உள்ள அரச காணிகள் தொடர்பான தகவல்களை வரைபடங்களாங்குவதற்காக இலங்கை தகவல் மற்றும் தொலைதொடர்பு முகவர் நிறுவனம், மேல் மாகாணத்தில் உள்ள காணிகள் தொடர்பான தகவல் களை உள்ளடக்கிய வரைபடங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் உள்ள அரசிற்கு சொந்தமான காணிகள் தொடர்பான தகவல்களை, கணனி மயப்படுத்தும் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக, இத்திட்டம் முன்னெடுக்கப் படுவதாகவும், இதன் மூலம் மேல் மாகாணத்தில் அரசிற்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் காணிகள், சுற்றாடல் அடிப்படையில் முக்கியம் வாய்ந்த காணிகள், என்பவற்றை இனங்காண முடியுமென, இலங்கை தகவல் மற்றும் தொலைதொடர்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment