Monday, April 23, 2012

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொலிஸாரின் விளையாட்டு நிகழ்வுகள்

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாண பொலிஸாரினால் ஒழுங்கு செய்யப்பட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. நிகழ்விற்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிகழ்வுகளைச் சம்பிரதாயப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொலிஸாரின் விளையாட்டு நிகழ்வுகள்
2012ம் ஆண்டிற்கான தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளைக் கொண்டதான நிகழ்வுகள் கோட்டை முனியப்பர் கோயில் முன்றலில் இன்றைய தினம் நடைபெற்றன.

நிகழ்வில் முதலாவதாக பொலிஸ் திணைக்களக் கொடியினை வடபிராந்திய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி சில்வாவும் மாவட்டக் கொடியினை திருமதி யோகேஸ்வரி பற்குணராசாவும் ஏற்றி வைத்ததுடன் மங்கல விளக்குகளையும் ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து ஆண்களுக்கான 72 கிலோ மீற்றர் நெடுந்தூர சைக்கிளோட்டப் போட்டியை அமைச்சர் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.

பெண்களுக்கான 40 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்டதாக நெடுந்தூர சைக்கிளோட்டப் போட்டியை வடபிராந்திய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா தொடக்கி வைத்ததுடன் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான குறுந்தூர சைக்கிளோட்டப்போட்டியும் இடம்பெற்றது.

ஆண்டுதோறும் மாவட்டப் பொலிஸாரினால் தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டியதான இவ்வாறான போட்டிகள் மற்றும் நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com