Saturday, April 21, 2012

பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் மே மாதம் முதலாம் திகதி வழங்கப்படும்

மேல் மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கை மே மாதம் முதலாம் திகதி ஆரம்பமாக வுள்ளதாக தெரிவித்த மேல் மாகாண முதலமைச்சர் பட்டதாரிகள் தமக்கான நியமனக் கடிதத்தை பெறுவதற்கு முன்னர் ஒருவார காலத்திற்கு தொண்டர் ஆசியர்களாக கடமையாற்ற வேண்டுமென மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நேர்முகப் பரீட்சை மற்றும் எழுத்துப் பரீட்சை ஆகிய இரு பரீட்சைகளுக்கும் முகங்கொடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கே இந்த நியமனம் வழங்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com