Wednesday, April 18, 2012

இந்திய நடாளுமன்றக் குழு இன்று வடக்கு செல்கிறது

இந்திய நடாளுமன்றக் குழு இன்றைய தினம் வடமாகாணத்துக்கான தமது பயணத்தை மேற்கொள்கிறது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படடுள்ள மக்களை அவர்கள் சந்திக்கவிருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்து.

அத்துடன் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தையும் மேற்கொள்ளவுள்ள அவர்கள், யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களை நேரில் சென்று பார்வையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அங்கு பல அரசாங்க அதிகாரிகளையும் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com