Thursday, April 12, 2012

ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவருக்கு விடுமுறை.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஆயுள் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ராமையா ரவீந்திரன் என்ற நபருககு சிறைச்சாலைகள் திணைக் களம் ஒரு நாள் விடுமுறை வழங்கியுள்ளது.

ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இவருக்கு 2010 ஆம் ஆண்டு சிறைச்சாலைக்குள் திருமணம் நடைபெற்றிருந்தது அத்துடன் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவருக்கு முதன்முறையாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment