Wednesday, April 18, 2012

சிரிய இராணுவம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டு பகுதிகள் மீது தாக்குதல்

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டு ப்பாட்டிலுள்ள பிரதேசங்களின் மீது அந்நாட்டு இராணுவம் மேற்கொண்ட குண்டு தாக்குதலில் 50ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்

இதேவேளை, சிரிய அரசாங்கத்திற்கும் கிளர்ச்சிப்படைகளுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்தத்தை கண்காணிப்பதற்காக, 6 பேர் அடங்கிய ஐக்கிய நாடுகள் கண்காணிப்பு குழு தெற்கு சிரியாவின் டெரா நகருக்கு நேற்று விஜயம் மேற்கொண்டுள்ள அதேவேளை, சிரிய சமாதான திட்டம் தொடர்பாக அரபுலீக்குடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள ஐ.நா விசேட பிரதிநிதி கொபி அனான் நேற்று கட்டாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment