Saturday, April 14, 2012

இலங்கை அஹ்மதியா இளைஞர் அணியினரால் கரப்பந்தாட்டத் திடல் திறந்து வைப்பு

இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் நீர்கொழும்பு இளைஞர் அணியினரால் நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள பள்ளிவாசலில் புதிய கரப்பந்தாட்டத்திடல் (Volley Ball) ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை (13-4-2012) ஜும்மாத் தொழுகையின் பின்னர் “துஹா “ பிரார்த்தனையோடு இந்நிகழ்வு இடம்பெற்றது. இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் நீர்கொழும்பு இளைஞர் அணியினரால் அமைக்கப்பட்டுளள்ள இத்திடலை திறந்து வைக்கும் நிகழ்வில், மௌலவி முனீர் அஹமத், ஜமாஅத்தின் உதவித் தலைவர் ஜனாப் பஸ்லுல்லாஹ், நீர்கொழும்பு ஜமாஅத்தின் நிருவாக சபை உறுப்பினர்கள் உட்பட பலர்கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment