Thursday, April 19, 2012

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்படுமா?

அத்தியாவசிய பொருட்கள், மருந்து வகைகள் , எரிபொருள் ஆகியவற்றின் விலைகளை 10 முதல் 15 சதவீதம் அதிகரிப்பதற்கு திரைச்சேரி உத்தேசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பருப்பு ,சீனி ,பால்மா வகைகள் காய்நத மிளகாய் போன்ற பொருட்களிற்கு விதிக்கப்பட்டுள்ள விலைகளை அதிகரிக்கவும் ,எரிவாயு பெற்றோல்,டீசல் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்கவும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ரயில் கட்டணம் மற்றும் தொலைபேசி கட்டணம் என்பவற்றையும் அதிகரிக்கவும் உத்தேசிக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com