Thursday, April 12, 2012

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் இடைநிறுத்தம்- பல்கலைக்கழக நிர்வாகம்

யாழ்.பல்கலைக்கழத்தில் முதலாம் வருட கலைப்பீடத்தில் கல்வி பயின்ற தில்லைநாதன் தனராஜ் (வயது 22) என்ற மாணவனை பகிடிவதைக்குள்ளாக்கிய மூன்று சிரேஸ்ட மாணவர்களை பல்கலைக்கழக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தடை விதித்து இடைநிறுத்தியுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் 28 ஆம் திகதி குறிப்பிட்ட மாணவன் பகிடிவதைக்குள்ளாக்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களை இடைநிறுத்தியுள்ளதுடன் இவ்வாறு பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment