Thursday, April 5, 2012

ஆசனபட்டி அணியாவிட்டால் ஆயிரம் ரூபா அபராதம்

ஆசன பட்டிகளை அணியாமல் செல்லும் வாகன சாரதிகளிடம் அதே இடத்தில் 1000 ரூபாவை அபராதமாக விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பதில் அமைச்சரவை பேச்சாளர் லச்மன் யாப்பா அபேவர்த்தன அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது இன்று இதனை தெரிவித்தார்.

இந்த நடைமுறை ஏற்கனவே அமுலில் உள்ள போதிலும் அது உரிய முறையில் முறைப்படுத்தப்படுவது இல்லை எனவும்,இதனை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment