Tuesday, April 3, 2012

யாழில் நோயின் கொடுமை தாங்க முடியாமல் வயோதிபப் பெண் தீ முட்டி தற்கொலை

யாழில் நோயின் கொடுமை தாங்க முடியாமல் வயோதிபப் பெண்மணி ஒருவர் தனக்குத் தனே மண் எண்ணையை ஊற்றித் தீ முட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ்.சிவகுருநாதர் வீதி நீராவியடியைச் சேர்ந்த சிவசம்பு நாகேஸ்வரி (வயது70) என்பவரே இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத வேலையில் இவ்வாறு தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளாதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த முதியவரது சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையின் சவச் சாலையில் வைக்கப்பட்டுள்ளதுசம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment