Sunday, April 1, 2012

இலங்கையின் ஜனத்தொகை முடிவுகள் மாத இறுதியில்

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சனத்தெகை கணக்கெடுப்புக்களின் இறுதி பெறுபேறுகள் இந்த மாத (ஏப்ரல் இறுதியில் வெளியிடப்படும் என்று மக்கள் கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

முதலில் மாவட்ட ரீதியாகவே இந்த பெறுபேறுகள் வெளியிடப்படும் எனவும், பின்னர் முழுமையான பெறுபேறுகள் வெளியிடப்படும் எனவும் திணைக்களத்தின் பணிப்பாளர் சுரஞ்சினா வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.

பல கட்டங்களாக இடம்பெற்ற இந்த கணக்கொடுப்புகள் மார்ச் மாதம் 20 ஆம் திகதியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment