Thursday, April 12, 2012

குமார் குணரத்தினம் 40 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்தும் வரையில் இலங்கைவரத் தடை

குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் குமார் குணரத்தனம் என்ற நொயல் முதலிகேவுக்கு விதிக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ரூபா தண்டப்பணத்தை செலுத்தும் வரையில், அவருக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க முடியாது என்று இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் நிர்வாகி சூலானந்த பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

குமார் குணரத்தினம் என்ற நொயல் முதலிகே அவுஸ்ரேலியாவில் இருந்து இலங்கை வந்து, தமது வீஸா காலம் முடிவடைந்த நிலையிலும் இலங்கையில் தங்கியிருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், இந்த குற்றத்திற்காக அவருக்கு 40 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் சூலானந்த பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com