Monday, March 5, 2012

கோழிகளுக்கு இனந்தெரியாத நோய் கிளிநொச்சியில் மக்கள் கவலை


கிளிநொச்சியில் சுய உதவிக்காக வழங்கப்பட்ட கோழிகளில் பெரும்பாலானவை இனந்தெரியாத நோயினால் செத்து மடிந்துள்ளதாக அப்பகுதி பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

அரசசார்பற்ற நிறுவனங்களினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குகென கால்நடை வளர்ப்பு வீட்டுத்தோட்டம் உள்ளிட்ட சுயதொழிலுக்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு சுயதொழில் உதவிக்காக வழங்கப்பட்ட கோழிகளே இவ்வாறு இனந்தெரியாத நோயினால் செத்துள்ளதாக தெரியவருகின்றது. இதனால் பொது மக்கள் அதிகளாவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment