Sunday, March 25, 2012

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரம் வெளியாகும்

கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது பெறுபேறுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.எம்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் நடந்த கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சையில் பாடசாலை மற்றும் தனியார் பரீட்சாத்திகள் 5 லட்சத்து 32 ஆயிரம் பேர் தோற்றியிருந்தனர்.

கடந்த வருடம் சாதாரண தர பரீட்சைக்கு அதிக எண்ணிக்கையான பாடசாலை மாணவர்கள் தோற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com