Saturday, March 31, 2012

இந்திய எதிர்கட்சித் தலைவர்களை சந்திக்கச் செல்லும் சந்திரிகாவும் ரணிலும்.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் நிகழ்வொன்றில் சிறப்பு விருந்தினர்களாக முன்னால் ஜனாதிபதி சந்திரிகா மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் இவர்கள் இந்தியாவின் எதிர்கட்சி தலைவர்களை சந்தித்துப்பேசவுள்ளதாக தெரியவருகின்றது.

ஐக்கியநாடுகள் சபையில் அமெரிக்காக இலங்கைக்கு எதிராக கொண்டுவந்த பிரேரணை விடயத்தில் இந்தியா செயற்பட்ட விதம் தொடர்பில் இலங்கை தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்படுகின்ற இந்நிலையில் இவர்கள் எதிர்கட்சிகளை சந்திக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment