Sunday, March 25, 2012

வானொலிக் குயிலின் பூதவுடல் கலாபவனில் மக்கள் அஞ்சலிக்காக

காலஞ்சென்ற பிரபல அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகத்தின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக கொழும்பு கலாபவனில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் வைத்து மாரடைப்பினால் மரணமாகிய ராஜேஸ்வரி சண்முகத்தின் பூதவுடல் இன்று காலை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதன் பின்னர் காலை 10.30 மணிமுதல் மாலை 4 மணிவரை மக்கள் அஞ்சலிக்காக கலாபவனில் வைக்கப்பட்டுள்ளது.

மாலை 4 மணிக்கு இறுதிக் கிரியைகள் ஆரம்பமாகி மாலை 6 மணியளவில் கனத்தை பொது மயானத்தில் தகனம் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment