Friday, March 30, 2012

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணைக்கு இணங்கப் போவதில்லை - ஜீ.எல்.பீரிஸ்

இலங்கை எதிராக ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணைக்கு இணங்கப் போவதில்லை எனவும் இப்பிரேரணை நிறை வேற்றப்பட்டுள்ளதால் எதுவும் மாறப்போவதில்லை எனவும் சர்வதேசத்தின் தலையீட்டிற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மக்களின் ஆணையினைப் பெற்றுள்ள அரசாங்கமே நாட்டின் கொள்கைளை தீர்மானிக்கும் என தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் நாட்டு மக்களின் அபிலாஷைகளை புரிந்துகொண்டு எந்த செயற்றிட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமென்பது குறித்து நடவடிக்கைகள் எடுப்பதாகவும் இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com