Friday, March 23, 2012

பொல்கஹவெல அல் அக்ஷா பாடசாலையின் பொன் விழாவை விசேட கண்காட்சி

பொல்கஹவெல அல் அக்ஷா பாடசாலையின் 50 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் விசேட கண்காட்சி நடைபெற்றது.

இக் கண்காட்சியினை குருநாகல் மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலைகளைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையான மாணவர்கள் பார்வையிட்டதைக் காணக் கூடியதாக இருந்தது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஷ;வி ஜவஹர்ஷா கண்காட்சியை திறந்து வைப்பதையும், அருகில் பாடசாலை அதிபர். குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் சஹாப்தீன் நிற்பதையும், மற்றும் வடமேல் மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் நஷுர் ஆகியோர் கண்காட்சியைப் பார்வையிடுவதையும், மாணவர்களின் கண்காட்சி நிகழ்வையும் படங்களில் காணலாம்.

செய்தி :-இக்பால் அலி

No comments:

Post a Comment