Friday, March 2, 2012

சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஆண்டு விழா

சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஆண்டு விழா நீர்கொழும்பு இந்து இளைஞர்மன்ற கலாசார மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(4-3-2012)மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது .

நீர்கொழும்பு விவேகானந்த நலன்புரி நிலையத்தின் தலைவர் வ.வடுகராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சர்வ ரூபானந்தா பிரதம விருந்தினராகவும் , நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் பொ. ஜெயராமன் , விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி அதிபர் எஸ் .கணேசலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

No comments:

Post a Comment