Thursday, February 2, 2012

கிணற்றில் விழுந்து பத்து வயது சிறுவன் பரிதாப மரணம்

குளிக்கச்சென்றவேளை கால் தடுமாறி கிணற்றிலினுள்ளே விழுந்து பத்து வயது சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது.

இதில் கோப்பாயைச் சேர்ந்த என். நிலக்ஷன் வயது 10 என்ற மாணவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவாரார்.

இவரது சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேதப்பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com