Friday, February 24, 2012

முந்தல் பிரதேசத்தில் கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டுள்ளார்

நேற்று முன்தினம் முந்தல் பகுதியில் பாலர் பாடசாலை ஒன்றிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட சிறுமி இன்று பொலிஸாரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

சிறுமியை கடத்திச் சென்றதாக கூறப்படும் நபரையும், அவருக்கு உதவிய மற்றுமொரு பெண்ணையும் பொலிஸார் கைது செய்ததுள்ளனர்.

சிறுமியின் தயாரின் உறவினர் ஒருவராலேயே சிறுமி கடத்தப்பட்டுள்ளார்.

சிறுமி பாலர் பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அங்கு சென்ற சந்தேக நபர், அவரை அழைத்துச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment