Sunday, February 12, 2012

பஸ் பகிஸ்கரிப்பா? எதிர்கொள்ளத்தயாராகவே இருக்கிறோம் என்கிறது அரசாங்கம்.

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளும் பணிப்பகிஷ்கரிப்பை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவித்துள்ள நிலையிலே தனியார் போக்குவரத்து அமைச்சர் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment