Sunday, February 26, 2012

இலங்கைக்கு எதிராக இணையுமாறு அமெரிக்கா உலக நாடுகளுக்கு அழுத்தம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அமெரிக்கா உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக ஜெனீவா சென்றுள்ள இலங்கை குழுவின் தலைவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வில அங்கம் வகிக்கும் 192 நாடுகளினதும் மனித உரிமைகள் நிலைவரங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யும் மாநாடு அக்டோபரில் நடைபெறவுள்ளதால், அந்த மாநாட்டில் இலங்கை மனித உரிமைகள் தொடர்பில் ஆராயலாம் எனவும், நாளை நடைபெறவுள்ள மாநாட்டில் அது தேவையில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் .

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com