Wednesday, February 29, 2012

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் புதிய நடைமுறைகள் அமுல் படுத்தப்படவுள்ளன.


அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால்; மாவட்ட மட்டத்தில் செயல்ப்படுத்தும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக்களின் செயல்பாட்டை வலுவூட்ட புதிய நடைமுறைகள் அமுல்ப்படுத்தப்படவுள்ளன.

அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்க அனர்த்த முகாமைத்து அமைச்சின் வழிகாட்டலிலேயே இவை மேற்கொள்ளப்படவுள்ளன.

ஜப்பான் ஜெய்கா திட்ட உதவியில் இந்த புதிய நடைமுறைகளை அமுல்;படுத்த அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவின் அங்கீகாரத்திற்கு அமைய அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் முதல் கட்டமாக மட்டக்களப்பு, மாத்தளை மாவட்டங்களுக்கென புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய திட்டங்களின் வரைபுகளை ஆராயும் விசேட நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைiமையில் நடைபெற்றது.

ஜெய்கா திட்டத்தின் பிரதிநிதி ஜூஸிகோ உச்சிகுரா அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் சத்துரலியன ஆராச்சி உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment