Monday, February 6, 2012

பாடசாலை நேரத்தை அரை மணித்தயாலத்தால் அதிகரிக்க உத்தேசம்

அரசாங்க பாடசாலைகள் நடைபெறும் நேரத்தை மேலும் அரை மணித்தியாலத்தால் அதிகரிக்க அரசாங்கம் கவனமெடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

தற்போது பாடசாலை நடைபெறும் கால நேரத்தில் பாடங்களை போதிப்பதற்கான நேரம் போதவில்லை என்று கல்வி நிபுணர்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக பாடசாலை நடைபெறுகின்ற நேரத்தை அரை மணித்தியாலங்களால் அதிகரிக்குமாறு அவர்கள் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளனர் என்று லங்கா சி நிவ்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment