Thursday, February 16, 2012

முதலமைச்சர் சந்திரகாந்தனுடன் முன்பள்ளி ஆசிரியர்களின் வலையமைப்பு சந்திப்பு

கிழக்குமாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுடன் மனிதஅபிவிருத்தித் தாபனத்தின் அம்பாறை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களின் வலையமைப்பு நேற்று புதன்கிழமை திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் சந்திப்பொன்றை நடாத்தியது.

முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தாபன இணைப்பாளர் பி.ஸ்ரீகாந், வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை இணைப்பாளர் எம்.எம்.சறூக், தமிழர் ஆசிரியர்சங்கத் தலைவர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோருடன் வலைப்பின்னலின் ஆசிரியர் பிரதிநிதிகள் எடுத்துரைப்பதையும் முதல்வரின் செயலாளர் கலாநிதி. எஸ்.அமலநாதன் உடனிருப்பதையும் படங்களில் காணலாம்.

படங்கள்:- காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா

No comments:

Post a Comment