Saturday, February 18, 2012

நெல்லை களவு செய்த எலஹெர பிரதேச சபை உறுப்பினர் கைது

அரசாங்க நெல் சபைக்கு சொந்தமான நெல்லை அரசாங்க நெல் களஞ்சியசாலையில் இருந்து சட்டவிரோதமாக தனியார் வர்த்தகர் ஒருவருக்கு விநியோகித்த சந்தேகத்தின் பேரில் எலஹெர பிரதேச சபை உறுப்பினரையும் நெல்லை விநியோகிப்பதற்காக பயன்டுத்தப்பட்ட லொறியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment