Friday, February 24, 2012

நல்லிணக்கப் பணிகளை சீர்குலைக்கும் வகையில் அமெரிக்க தலைமையிலான சில நாடுகள் செயற்படுகின்றதாம்

யுத்தத்தின் பின்னரான இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்கப் பணிகளை சீர்குலைக்கும் வகையில் சில நாடுகள் செயற்பட்டு வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

குறிப்பாக அமெரிக்க தலைமையிலான சில நாடுகள் இவ்வாறு இலங்கை நிலைமைகளை திரிபுபடுத்தி பிரச்சாரம் செய்து வருதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தலைமையிலான சில நாடுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரம் ஒழுக்க விதிகளுக்கு முரணானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகள் புலிகளின் செயற்பாடுகளுக்குவலு சேர்க்கும் வகையில் அமையும் எனவும், இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் உறுப்பு நாடுகளுக்கு தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com