Thursday, February 2, 2012

வாத்துகள் மற்றும் கிளிக் குஞ்சுகளை இலங்கைக்கு கடத்திவந்த நபர் கைது

மிகவும் சூட்சுமமான முறையில் பேங்கொக்கிலிருந்து வாத்துகள், கிளிக் குஞ்சுகளை இலங்கைக்கு கடத்திவந்த நபர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

தாய்லாந்து விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தின் மூலமாக ரூபா.8 இலட்சத்து 20 ஆயிரம் பெறுமதியுடைய 4 வாத்துகளையும் 8 கிளிக் குஞ்சுகளையும் இவர் கடத்திவந்துள்ளார். மொரட்டுவைப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்ட 8 குஞ்சுகளையும் உடனடியாக திருப்பி அனுப்புமாறு விமான சேவை நிறுவனத்துக்குப் பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடத்தி வந்த நபருக்கு ரூபா 1 இலட்சம் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com