Friday, February 3, 2012

களவாக நுழைந்த இந்திய ஊடகவியலாளர்கள் இருவர் மாட்டினர்.

இலங்கையினுள் செய்தி சேகரிப்பதற்காக களவாக நுழைந்த இரு இந்திய ஊடகவியலாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்கள் செய்திகளை சேகரிக்க நாட்டினுள் நுழையும்போது, தமது வருகை தொடர்பாக தெரியப்படுத்தி அதற்கான அனுமதியை ஊடக அமைச்சில் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது வழிமுறை.

இவ்வழிமுறையை பின்பற்றாது, உல்லாசப்பிரயாணிகள் என்ற போர்வையில் நுழைந்த இரு இந்திய ஊடகவியலாளர்கள் இனம்காணப்பட்டதுடன், பின்னர் அவர்கள் தமது தேவையை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து அவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என குடிவரவு, குடியகல்வு துறை அதிகாரி ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

இவ்வாறு இனம்காணப்பட்டவர்கள் புதிய தலைமுறை எனும் இந்திய தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com