Friday, February 3, 2012

மணிக்கூட்டுக்காக இரட்டைக் கொலை செய்தவர் லண்டன் சிறையில் தற்கொலையாம்.

லண்டன் பிர்மிங்காமில் வசித்த இந்தியரும், அவரது பிரிட்டிஷ் மனைவியும் கடந்த மாதம் 11ம் திகதி மர்மமாக கொலைசெய்யப்பட்டிருந்த செய்தி யாவரும் அறிந்தது. தற்போது கொலை தொடர்பான மர்மம் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் லித்துவேனியா நாட்டைச் சேர்ந்தவரால் சுத்தியலால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளமை தற்போது தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் மகன் லண்டனில் ஓர் பொலிஸ் அதிகாரியாவர். அவர் இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின் பேரில் லித்துவேனியா நாட்டைச் சேர்ந்த ரிம்விடேஸ் லிக்கோரன்ஸ், 37 என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட சந்தேக நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் தனது இறுதிக்குறிப்பில், மணிக்கூடு மற்றும் இரு தொலைபேசிகள் என்பவற்றுக்காகவே இக்கொலையைப் புரிந்துள்ளதாக எழுதி வைத்துள்ளாராம்.

எது எவ்வாறாயினும் இவ்வாறனதோர் சம்பவம் இலங்கையில் இடம்பெற்றிருந்தால், ஐந்துவாரங்களுக்கு இதுவே தலைப்புச் செய்தியாக இருந்திருக்கும், ஆனால் குருக்கள் செய்தால் அதுதவறில்லை என்ற பழமொழிக்கு இணங்க இவ்விடயம் மறைக்கப்பட்டுள்ளது என சில குசுகுசுப்புக்களை மாத்திரம் கேட்கக்கூடியதாகவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com