Friday, February 10, 2012

வடமராட்சியில் பூட்டிய வீடு உடைத்து களவு- கணவன் மனைவி மீதும் திருடர்கள் வாள் வெட்டு

வடமராட்சியில் வாள் மற்றும் பெல்லுகளுடன் நுழைந்த 5 பேர் கொண்ட குடும்பலென்று வீட்டில் இருந்த வயோதிப மனைவி மற்றும் கணவனை வாளால் வெட்டி தாக்கி விட்டு மனைவியின் கழத்திலிருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

இச்சம்பவம் நேற்று அதிகாலை 5.45 மணியளவில் வடமராட்சி பொலி கண்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் பின்பக்கமாக ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற இவர்கள் தம்பதியினரை பயமுத்தி சத்தமிடாது செய்துள்ளனர்.

பின்னர் அவர்களின் வீட்டிற்குள்ளாக சல்லடை போட்டுத் தேடிய போதும் எந்த விதமான பெறுமதியான பொருட்களும் அவர்களுக்கு அகப்படவில்லை.

இதனால் கடுப்படைந்து திரும்பி செல்ல முற்படும் போது மனைவியின் கழுத்திலிருந்த 2 பவுண்சங்கிலியை பறித்துக்கொண்டு இருவரையும் வெட்டி காயப்படுத்திக்கொண்டு தப்பி சென்றனர்.

இச்சம்பவத்தில் க.பாலசுந்தரம் வயது 61 அவர் தம்மனைவியான பா.வசந்தகுமாரி வயது 57 ஆகிய இருவருமே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்கானவர்களாவார்கள்.

இவர்கள் இருவரும் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment