Thursday, February 2, 2012

மரம் வெட்டிய குடும்பஸ்தரை முறியும் போது பழிவாங்கிய வேப்ப மரம்

மரம் வெட்டச்சென்ற போது வெட்டிய மரம் முறிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக மரணமாகியுள்ளார். இச்சம்பவம் இன்றைய தினம் கோண்டாவிலில் இடம்பெற்றுள்ளது.

இதில் இனுவிலைச் சேர்ந்த மார்க்கண்டு சற்குணம் வயது 42 என்ற குடும்பஸ்தரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இவர் இன்று காலை வேப்பமரம் ஒன்றை வெட்டுவதற்காக சென்ற வேளை அம்மரத்தை வெட்டிய பின்னர் அதனை இழுத்து முறிக்க முற்பட்டுள்ளார். இதன்போது அம்மரம் முறிந்து அவர் மேல் விழுந்துள்ளது.

இதன் பின்னர் அங்கிருந்து அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆயினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று மாலை உயிரிழந்தார். இவரது சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com