Friday, February 3, 2012

பிரதமரின் நிகழ்வில் அழையா விருந்தாளியாக விஜயகலா எம்.பி காரை நகர் மக்கள் கடுப்பில்

ஊடகங்களில் அரசாங்கத்தை சாடிக்கொண்டு அரசாங்க நிகழ்வுகளில் கலந்து கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார் ஜக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் என காரைநகர் மக்கள் கடுப்படைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் செய்த பிரதம டி.எம்.ஜெயரட்ண காரைநகரிலுள்ள ஈழத்து சிதம்பரத்தின் கோகிலம் பிருந்தாவனம் ஆகிய திட்டத்திற்கு அத்திவராம் இட்டு இத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்

இந்நிகழ்வுகளுக்கு ஜக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கலந்து கொண்டுள்ளார். குறிப்பாக அவர் பிரதமருக்கு அருகிலேயே எப்பொழுதும் காணப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்ட போதும் அவரையும் இவர் விலத்தி விட்டு பிரதமருடன் நெருக்கமாக கதைத்துக்கொண்டிருந்தது பொது மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாண ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சித்து ஊடக அறிக்கைகளை விட்டுக்கொண்டு பின்னர் அரசாங்கத்தோடு சேர்ந்து மக்கள் முன்னிலையில் தோன்றி அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி திட்டங்களில் தனக்கு பங்கு இருப்பது போன்று பாசாங்கு செய்யும் இவரது செயற்பாடுகள் தொடர்பாக பொது மக்கள் கடும் வெறுப்படைந்துள்ளனர்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com