Wednesday, February 15, 2012

சிலாபத்தில் மரணமான மீனவருக்காக நீர்கொழும்பு மீனவர்கள் இரு தினங்கள் துக்கம் அனுஸ்டிப்பு

சிலாபத்தில் இன்று மீனவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிசூட்டில் மரணமான அன்ரனி பெர்னாண்டோ என்ற மீனவருக்காக நீர்கொழும்பு மீனவர்கள் இரண்டு தினங்கள் துக்கதினம் அனுஷ்டிக்கவுள்ளனர்.

அதற்காக நீர்கொழும்பு மீனவர்கள் இரு தினங்கள் கடலுக்கு தொழிலுக்காக செல்ல மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை, இன்றைய தினமும் நீர்கொழும்பு நகரின் முக்கிய இடங்களில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ,கலகம் அடக்கும் பிரிவினரும் குவிக்கப்பட்டிருந்தனர் .

No comments:

Post a Comment