Sunday, February 26, 2012

ஜெனீவா பிரேரணை அரசாங்கத்திற்கு எதிராகவே : நாட்டுக்கு எதிராக அல்ல- ஐ.தே.க

நாளை 27 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணை மட்டுமே என்று ஐக்கிய தேசிய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த பிரேரணை நாட்டுக்கு எதிரானதல்ல என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஹெல்ல குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment