Wednesday, February 22, 2012

கனடா அரசாங்கம் அகதிகள் தொடர்பான சட்டங்களை கடுமையாக்கியுள்ளது.

கனடாவில் அகதிகள் தொடர்பிலான சட்டங்களை அந்நாட்டு அரசாங்கம்  கடுமையாக்கியுள்ளதாக கனேடிய குடிவரவு மற்றும் குடியகழ்வு  துறை அமைச்சரை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி சேவை  தெரிவித்துள்ளது.  கனடாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் வருகை தருவதால் அந்நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாகவும் அதனை கருத்திற் கொண்டோ கனேடிய அரசாங்கம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் பிபிசி மேலும் குறிப்பிட்டுள்ளது.

  2010 ஆம் ஆண்டு ஒக்டோம்பர் மாதம் 76 இலங்கை அகதிகளை ஏற்றிக் கொண்டு ஓஷேன் லேடி கப்பலும் 500 இலங்கையர்களுடன் எம்.வி.சன்சி  எனப்படும் மற்றொரு கப்பலும் கனடாவிற்கு வருகை தந்தமை இத்தீர்மானத்தில் பாரிய தாக்கங்களை செலுத்தியுள்ளதாக பிபிசி சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் தமிழர்களுக்கு சுதந்திரமாக வாழும் சூழ்நிலை காணப்படுவதாகவும், அவர்களுக்கு வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்வ்தற்கான தேவை  இல்லையெனவும்   ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம்  தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment