Thursday, February 9, 2012

சம்பள உயர்வுக்காக வைத்தியசாலைகளில் தாதியர் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பு

சம்பள உயர்வு வழங்கக்கோரி நாடாளவிய ரீதியில் தாதியர்கள் இன்றைய தினம் மேற்கொண்ட பணிப்பகீஸ்கரிப்பில் யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்களும் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்தனர் .

சம்பள உயர்வு வழங்கக்கோரி நாடாளாவிய ரீதியில் தாதியர் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாவே இன்று காலை 10 மணி முதல் 12 மணிவரை யாழ்.போதனா வைத்தியசாலையிலும் இப்போராட்டம் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட தாதியர்கள் தாங்களுக்கான கொடுப்னவுகளை குறைக்கவேண்டாம் என்றும தமக்கான கொடுப்பனவை வழங்குமாறு கோரி பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

No comments:

Post a Comment