Sunday, February 12, 2012

தம்பலவத்தை கிராமத் தோட்டமொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி தம்பலவத்தை கிராமத்திலுள்ள தோட்டமொன்றிலிருந்து ஆணொருவரின் சடலமொன்றை இன்று காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கிராம மக்கள் வழங்கிய தகவலையடுத்து இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்

ஒல்லிமடுவாள் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கணேசமூர்த்தி (வயது- 54) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



No comments:

Post a Comment