Thursday, February 9, 2012

யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்.

தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர்; வட்டுக்கோட்டைப் பொலிஸரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் சுழிபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் சுழிபுரம் பத்திரகாளி கோயிலடியைச் சேர்ந்த ஜெயராஜா வயது 27 என்ற குடும்பஸ்தரே என பொலிஸாரல் அடையாளங்காணப்பட்டுள்ளார்.

இவர் வெளிநாட்டுக்கு செல்வதற்கு போலி முகவர் ஒருவரிடம் பணம் கட்டி அதனை இழந்த நிலையில் மீண்டும் வெளிநாட்டுக்கு செல்வதற்காக பணம் செலுத்தியிருந்த நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். என் விசாரணைகளில் தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இவரது சடலம் தற்போது பிரேதப்பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை மூடுக்கி விட்டுள்ளனர்.

No comments:

Post a Comment